Published : 22 Apr 2021 03:13 AM
Last Updated : 22 Apr 2021 03:13 AM
தங்கத்தின் விலை நேற்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.512 உயர்ந்து,ரூ.36,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் அதன் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ரூ.36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்குரூ.512 உயர்ந்து ரூ.36,088-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4,511-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம்ரூ.4,447-க்கு விற்கப்பட்டது.
கரோனா அச்சம் மற்றும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெரும்பாலான நகைகடைகளில் நேற்று மக்கள் கூட்டம்குறைவாக இருந்தது. இருப்பினும், சுபநிகழ்வுகளுக்கு தங்கம் வாங்கிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT