Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

கோவையில் 25-ம் தேதி நடைபெற இருந்த - ராணுவப் பணிக்கான பொது நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு : மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தகவல்

கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெற இருந்த, ராணுவப் பணிக்கான பொது நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்ட ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தினால் கடந்த ஜனவரி மாதம், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், கோவை ஆகிய 11 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு தகுதி பெற்றவர்களுக்கு ராணுவப் பணியில் உள்ள சோல்ஜர் டெக்னீஷியன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் கிளர்க், அலுவலக காப்பாளர், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் டிரேட்ஸ்மேன் வகையிலான பணியிடங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு, கோவை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி நடத்த திட்டமிடப் பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக பொது நுழைவுத் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் படுவதாக ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக ஆள்சேர்ப்பு இயக்குநர் அறிவித்துள்ளார்.

இதற்காக முன்னரே வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டும் ரத்து செய்யப்படுகிறது. பொது நுழைவுத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். புதிய தேர்வுத் தேதி அறிவிக்கப் பட்ட பின்னர், தேர்வுக்கான நுழைவுச்சீட்டை கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திலோ அல்லது இந்திய ராணுவத்துக்கான www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x