Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM
ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் அரியலூர் ஆலைக்குஇந்தியா உச்ச தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு விருதுகள்-2020 சார்பில் ‘தங்கரகம்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராம்கோ சிமென்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உச்ச தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு விருதுகளுக்கான போட்டியில் சிமென்ட், எரிசக்தி, ஸ்டீல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 150-க்கும்மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. சிமென்ட் பிரிவில் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் பங்கேற்றது.
இதில் ‘தங்க ரகம்’ விருதுக்கு ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா புதுடெல்லியில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இந்தியஅரசு பாதுகாப்பு நிபுணர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பி.கே.சைகல், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா முன்னாள் பொது மேலாளர் சுபாஷ் சந்திர பாசின் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT