Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு விருது :

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் அரியலூர் ஆலைக்குஇந்தியா உச்ச தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு விருதுகள்-2020 சார்பில் ‘தங்கரகம்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராம்கோ சிமென்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உச்ச தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு விருதுகளுக்கான போட்டியில் சிமென்ட், எரிசக்தி, ஸ்டீல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 150-க்கும்மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. சிமென்ட் பிரிவில் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் பங்கேற்றது.

இதில் ‘தங்க ரகம்’ விருதுக்கு ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா புதுடெல்லியில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இந்தியஅரசு பாதுகாப்பு நிபுணர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பி.கே.சைகல், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா முன்னாள் பொது மேலாளர் சுபாஷ் சந்திர பாசின் ஆகியோர் விருதுகளை வழங்கினர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x