Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக 22, 23, 24 மற்றும் 25-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
21-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம்எட்டயபுரத்தில் 3 செமீ, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT