Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM
மதுரை விமானநிலையத்தில் இருந்து ஏற்கெனவே சிங்கப்பூர், டெல்லி விமானங்கள் ரத்தானநிலையில் மதுரை-ஹைதராபாத் விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டது.
கரோனா ஊரடங்கு நேரத்தில் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளதால் மக்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்த்து வருகின்றனர். வெளியூர் பஸ்களை இரவில் இயக்கக் கூடாது என்பதால் சென்னை செல்லக்கூடிய பஸ்கள் பிற்பகலுக்கு மேல் தமிழக பஸ்நிலையங்களில் இருந்து இயக்கப்படுவதில்லை.
2-வது அலை தொடங்கிய பிறகு விமானங்களில் மக்கள் பயணம் செய்யத் தயக்கம் காட்டுகின்றனர். மதுரையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூர், டெல்லி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மதுரையி லிருந்து ஹைதராபாத் செல்லும் விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டது. இந்த விமானம் வழக்கமாக மாலை 4.20 மணிக்குப் புறப்படும். தென் தமிழகத்தில் மதுரையிலிருந்து ஹைதராபாத் செல்வதற்கு இந்த ஒரு விமானம் மட்டுமே இருந்தது. தற்போது இந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வெறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மேலும், முழு ஊரடங்கை அமல்படுத்தினால் வேறு எங்கும் செல்ல முடியாது என்பதாலும், தொற்று பரவும் அபாயம் இருப்பதாலும் மக்கள் விமானப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கின்றனர். இதனால், விமான நிறுவனங்கள் போதிய பயணிகள் இல்லாமல் விமானங்களை ரத்து செய்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT