Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM
ராமநாதசுவாமி கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பணம், மாதந்தோறும் திறந்து எண்ணப்படும்.
அதன்படி நேற்று முன்தினம் காலை தொடங்கி இரவு வரை திருக்கல்யாண மண்டபத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி உண்டியல்களும், உப கோயில்களான கோதண்டராமர் கோயில், நம்புநாயகி அம்மன் கோயில் ஆகிய உண்டியல்களும் கோயில் ஆணையர் (பொறுப்பு) தனபால் தலைமையில் திறந்து எண்ணப்பட்டது. இப்பணியில் கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கமாக ரூ.1 கோடியே 16 ஆயிரமும், 145 கிராம் தங்கமும், 1 கிலோ 931 கிராம் வெள்ளியும் கிடைத்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT