Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் உடல் நலனையும், கரோனா தடுப்பூசியையும் ஒப்பிட்டு பேசிய நடிகர் மன்சூர்அலிகான் மீது சென்னை மாநகராட்சி அளித்த புகாரின்பேரில் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள்மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர்அலிகான், கரோனா தடுப்பூசி குறித்தும், சுகாதாரத்துறை செயலர் மற்றும் அரசியல்வாதிகள் குறித்தும் பல கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர் மீது சென்னை மாநகராட்சி சார்பில் 10-வது மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ், போலீஸில் புகார்அளித்தார். அதன்பேரில் மன்சூர்அலிகான் மீது வடபழனி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் மற்றும்தூண்டிவிடுதல், தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல், ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களை தூண்டிவிடுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மன்சூர்அலிகான், முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT