Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

ரூ.50 ஆயிரம் லஞ்சம் இன்ஸ்பெக்டர் கைது :

பெரம்பலூர்

பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் பால்ராஜ்(48). இவர், பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தில் கல் குவாரி நடத்தி வரும் ராம்நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம், குவாரியில் இருந்து அதிக சுமை ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

கல் குவாரி ஊழியர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவர் நேற்று காவல் நிலையத்துக்கு வந்து பால்ராஜிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீஸார், பால்ராஜை கைது செய்தனர்.

மேலும், கல் குவாரி தரப்பினர் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் டிஎஸ்பி சரவணனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x