Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM

பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்து :

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26-ம் தேதி இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு அரசு ஏற்கெனவே அறிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைந்திருந்த கரோனா பரவல் மார்ச் மாதம் முதல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “கரோனா பரவலை கருத்தில் கொண்டு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இணைந்துஇந்த முடிவை எடுத்துள்ளன.

அதேநேரம், இரு நாடுகளின் உறவை மேலும்வலுப்படுத்துவது தொடர்பானதிட்டங்களை வகுப்பதற்காக காணொலி வழி ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x