Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு தேர்வுகள் இயக்ககத்தால் மே 5 முதல் 21-ம் தேதிவரை நடக்கும் என அறிவிக்கப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. தேர்வு நடத்தப்படும் தேதிகுறித்த விவரம், தேர்வு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும்.
பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்கப்பட்ட விவரத்தை அனைத்துமுதன்மைக் கல்வி அதிகாரிகளும் தங்கள் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அவர்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தற்போது நடந்து வரும் செய்முறைத் தேர்வு மட்டும் திட்டமிட்டபடி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைப்படி நடத்தப்பட வேண்டும்.
செய்முறைத் தேர்வு மற்றும்அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்களை ஏற்கெனவே அரசு தேர்வுகள் இயக்ககத்தால் அறிவுறுத்தப்பட்ட நாட்களில் ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT