Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM
தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அனைத்து மத குருக்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளில், குடமுழுக்கு, விழாக்கள் நடத்த அனுமதியில்லை என்றுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்களில், வழிபாட்டுக்கான கட்டுப்பாடுகள், இதர நிகழ்வுகள் தொடர்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT