Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM
ஆண்டுதோறும் ராமநவமி திருமலையில் வெகு சிறப்பாக நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவலால், மத்திய, மாநில அரசுகளின் நிபந்தனைகளை பின்பற்றியவாறு ராம நவமி ஆஸ்தானத்தை நடத்த தேவஸ்தானம் தீர்மானித் துள்ளது.
நாளை புதன் கிழமையன்று காலை உற்சவ மூர்த்திகளான சீதாதேவி, லட்சுமணர், அனுமன் சமேத மாய் ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இரவு கோயிலில் உள்ள தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் ஆகம விதிகளின் படி நடத்தபட உள்ளது.
வரும் மே மாதம், ரூ.300 சிறப்பு கட்டணம் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள இன்று இணைய தளத்தில் டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT