Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலின் 4-வது அலையை டெல்லி எதிர்கொண்டு வருகிறது. எனவே இன்று (நேற்று) இரவு 10 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை காலை 5 மணி வரை டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,500 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக 2,500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. நாட்டில் கரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவே அதிகபட்சம்.
புலர்பெயர் தொழிலாளர்களிடம் கைகூப்பி வேண்டுகிறேன். டெல்லியை விட்டுச் செல்ல வேண்டாம்.இது ஒரு குறுகிய 6 நாள் ஊரடங்கு.இதனை நீட்டிக்கத் தேவையிருக்காது என நாம் நம்புகிறேன். உங்களை (தொழிலாளர்களை) டெல்லி அரசு கவனித்துக் கொள்ளும். கரோனா தடுப்பு பணியில் டெல்லிஅரசுக்கு உதவும் மத்திய அரசுக்குநன்றி தெரிவிக்கிறேன்.அடுத்த 6நாட்களில் டெல்லியில் கூடுதல் ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம்.ஆக்சிஜன், மருந்துகளை ஏற்பாடுசெய்வதற்கு ஊரடங்கு காலத்தை பயன்படுத்திக் கொள்வோம். கரோனா வழிகாட்டு விதிகளை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவில், “உணவு சேவை, மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் 50 பேர், துக்க நிகழ்ச்சியில் 20 பேர் கலந்து கொள்ளலாம். அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்துக்கு தடையில்லை. வழிபாட்டுத் தலங் களை திறக்கலாம். ஆனால் பக்தர் களை அனுமதிக்க கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு அறிவித்ததை தொடர்ந்து நகரின் அனைத்து மதுபானக் கடைகளிலும் கூட்டம் நிரம்பிவழிந்தது. மதுக்கடைகள் முன்பு நீண்ட வரிசைகள் காணப்பட்டன. ஒரு மதுபானக் கடைக்கு வெளியேபெண் ஒருவர் கூறும்போது, “ஊசிகளும் மருந்து மாத்திரைகளும் உதவியாக இருக்காது. ஆனால் மதுபானம் உதவியாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT