Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

பட்டா வழங்க பழங்குடியினர் கோரிக்கை :

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காக்கா கொத்திபாறை பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரிநேற்று சார்-ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு விவரம்:காக்காகொத்தி பாறை பகுதியில்30 குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அரசுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் குடிசைகள் அமைத்து வசித்து வருகிறோம்.

அதே பகுதியை சேர்ந்த தோட்ட உரிமையாளர் ஒருவர், 3 ஏக்கர் நிலம் தன்னுடையது என்றும், குடிசைகளை அகற்றுமாறும் கூறி வருகிறார். இதுகுறித்து வருவாய்த் துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. காக்காகொத்தி பாறை பழங்குடியின மக்களுக்கு, அந்தப் பகுதியில் பட்டா வழங்கி, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x