Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

இதய பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த - கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டிஸ்சார்ஜ் :

சென்னையில் வசிக்கும் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு, நேற்று முன்தினம் மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் ஆர்.வெங்கடாசலம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``முத்தையா முரளிதரனுக்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த சிகிச்சையை அளித்தனர். குணமடைந்துள்ள அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி அவர், தனது இயல்பான பணியைத் தொடரலாம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x