Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

ராஜபாளையம் அருகே : இரு பிரிவினரிடையே மோதல் : பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோத லால் அப்பகுதியில் பதற்றம் ஏற் பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையம் அருகே உள்ள ரெட்டிய பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை திருவேங்கடபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், கோடாங்கி பட்டியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி ஆகியோர் மது அருந்தினர்.

இரு தரப்பினரிடையே மோதல்

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே தங்கள் பகுதிக்குச் சென்ற இருவரும், அவர்களின் நண் பர்களை அழைத்துக் கொண்டு ரெட்டியபட்டிக்கு வந்தனர். அங்கு மீண்டும் இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது.

அப்பகுதியில் இருந்த டியூப் லைட்டுகள், வீடுகளின் கதவு கள், ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். இரு சக்கர வாகனங் களைச் சேதப்படுத்தினர்.

வில்லிபுத்தூர் டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையிலான போலீஸார் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.

வழக்குப் பதிவு

இந்தச் சம்பவம் தொடர்பாக திருவேங்கடபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (41), பாலமுருகன் (48), கோடாங்கிபட்டியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி (23), கிரி (22) ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காயமடைந்த மணிகண்டன், கருத்தப்பாண்டி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

இம்மோதல் காரணமாக ரெட்டியபட்டி பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x