Published : 20 Apr 2021 03:16 AM
Last Updated : 20 Apr 2021 03:16 AM
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் உடற்பயிற்சிக் கூடம் சார்பில், உடற்பயிற்சி மற்றும் உடல் நலத்தை பராமரிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
கோவளம் சுங்கச் சாவடி அருகே இப்போட்டியை பயிற்சியாளர் அக்கீம் சையத் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், சிறியவர்களுக்கு 5 கி.மீ. தொலைவும், பெரியவர்களுக்கு 10 கி.மீ. தொலைவும் போட்டி நடத்தப்பட்டது. சுங்கச் சாவடி அருகே ஓட்டத்தை தொடங்கிய போட்டியாளர்கள், வடநெம்மேலி பகுதியில் உள்ள முதலைப் பண்ணை அருகே நிறைவு செய்தனர். கேளம்பாக்கத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டியில் முதல் முன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சமூக ஆர்வலர் கே.ஏ.டி.அன்பு, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT