Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

ஒரே ஷாட்டில்ஆக்‌ஷன் காட்சி! :

அதர்வா முரளி, தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் சாம் ஆன்டன் இயக்கியுள்ள த்ரில்லர் படத்தில் பாடல் காட்சிகள் தவிர முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதை படக்குழு சமீபத்தில் கொண்டாடியுள்ளது. பிரமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25-வது படமாக உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறியபோது, ‘‘ஹைதராபாத்தில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இயக்குநரின் திட்டமிடல் சிறப்பாக இருந்ததால், திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்ட செலவில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சென்னையில் பாடல் காட்சிகளையும் விரைவில் படமாக்கி, டிரெய்லர், இசை, திரை வெளியீடு குறித்து அறிவிக்கப்படும்’’ என்றார்.

இயக்குநர் சாம் ஆன்டன் கூறும்போது, ‘‘ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சி பெரிய அளவில் பேசப்படும். ‘100’ படத்தை தொடர்ந்து, ஆக்‌ஷன் காட்சிகளை திலீப் சுப்பராயன் ஒருங்கமைத்துள்ளார். தலைப்பு உள்ளிட்டவை விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x