Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

கும்பமேளாவுக்கு சென்று வந்தால் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும் : டெல்லி தலைமை செயலர் உத்தரவு

‘‘ஹரித்துவார் கும்பமேளாவுக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பு பவர்கள், 14 நாட்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று டெல்லி தலைமை செயலர் விஜய் தேவ் உத்தரவிட்டுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளா கோலா கலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர். இதனால் கரோனா வைரஸ் அதிகமாக பரவும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை கும்பமேளாவில் பங்கேற்றவர் களில் 1,700 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி தலைமை செயலர் விஜய் தேவ் நேற்றுமுன்தினம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் வசிப்பவர்கள், ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவுக்கு சென்று விட்டு டெல்லி திரும்பினாலோ அல்லது இனிமேல் கும்பமேளாவுக்கு செல்ல இருப்பவர்களோ மீண்டும் டெல்லி திரும்பினால், கட்டா யம் 14 நாட்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், கும்பமேளா சென்று டெல்லி திரும்புபவர்கள் தங்கள் விவரங்களை, www.delhi.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏப்ரல் 4-ம் தேதி முதல் கும்பமேளாவுக்கு சென்றவர்கள் இதை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

விவரங்களை டெல்லி அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாவிட்டால், அவர்கள் கண்டிப்பாக அரசு தனிமை முகாமுக்கு அனுப்பப்படுவார்கள். அத்துடன், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x