Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் - வீட்டு ஜன்னல் கதவை உடைத்து 150 பவுன் திருட்டு :

ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் பூட்டியிருந்த வீட்டு ஜன்னல் கதவை உடைத்து 150 பவுன் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்டமூக்கண்டப்பள்ளி எம்.எம்.நகர்குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மாதையன். பொறியியல் பட்டதாரியான இவர் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு கடந்த ஓராண்டாக மூக்கண்டப் பள்ளியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

தற்போது, சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால், சொந்த ஊருக்கு அடிக்கடி சென்று வருவார். கடந்த 16-ம் தேதி காரிமங்கலத்துக்கு மாதையன் குடும்பத்தினருடன் சென்றார். ஓசூர் வீட்டை வேலையாட்கள் தினமும் கவனித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலைவீட்டுக்கு பணிப்பெண் வந்தபோது வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஜன்னல் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அவர் மாதையனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, ஓசூர் வந்த மாதையன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 150 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணகிரி எஸ்பி பண்டி கங்காதர் விசாரணை நடத்தினார். மேலும், புகாரின்பேரில் சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்தியதுடன், மேலும் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x