Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM
உதகை: வளி மண்டல சுழற்சியின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள நீலகிரி, கோவையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் 42.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, உதகை, குன்னூரில் புறநகர் பகுதிகளான உலிக்கலில் 30, கிளன்மார்கனில் 21, பாலகொலாவில் 18 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில், இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கன மழை நீடித்தது. குந்தா வட்டத்தில் இரண்டு மின் மாற்றிகள் பாதிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமான கிராமங்களில் மின் விநியோகம் தடைபட்டது. சீரமைப்புப் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT