Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

ஒலிம்பிக் போட்டியில் சிலம்பத்தை சேர்க்க நடவடிக்கை : இந்திய சிலம்பம் சங்கம் தகவல்

ஓசூர்

பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் போட்டியை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க முதல்கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது என இந்திய சிலம்பம் சங்க பொதுச் செயலாளர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

அகத்தியர் எழுதிய கம்பு சூத்திரம் என்ற நூலில் விலாவாரியாக சிலம்பம் பற்றி வரிசைப்படுத்தி உள்ளார். சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்னர் சிலம்பக் கலை தோன்றியதாக அகத்தியர் வரலாறு மூலமாக தெரிய வருகிறது.காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் ஆகிய பஞ்சபூதங்களும் இந்த சிலம்பத்தில் அடக்கம். போர்க் கலைக்கு தாய் கலையாகவும் சிலம்பம் திகழ்கிறது. சிலம்பக் கலையை அழியாமல் பாதுகாக்கும் வகையில் அதை ஒரு விளையாட்டாக மாற்று வதற்கு விதிமுறைகளை வகுத்ததன் மூலம் கடந்த 1980-ம் ஆண்டு முதல் சிலம்பக் கலை விளையாட்டாக மாற்றப்பட்டது.

சிலம்பக்கலையை உலக சிலம்பம் சங்க நிறுவனர் குருஜி முருகன் செல்லையா முயற்சியின் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறச் செய்வதற்கான முதல்கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட பணிகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x