Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

ஆட்டோ பேமென்ட் முறையில் - ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு :

வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஆட்டோ பேமென்ட் முறையில் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள்மின்சாரம், குடிநீர் போன்றவற்றுக் கான கட்டணத்தை வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோ பேமென்ட்முறையில் செலுத்துகின்றனர். வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள் ஆகியவை வழங்கும் இத்தகைய சேவைக்கான கட்டணத்தைத் தவணை முறையில் பெறுகின்றன. வாடிக்கையாளரின் அனுமதியுடன் மாதந்தோறும் அவர்கள்வங்கிக் கணக்கில் இருந்துஇந்தத் தவணையை தன்னிச்சையாக பிடித்தம் செய்கின்றன. இந்த முறை ஆட்டோ பேமென்ட்என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், வாடிக்கையாளர் களின் நலன் கருதி இம்மாதம் முதல் தேதி முதல் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அவரதுகணக்கில் இருந்து ஆட்டோ பேமென்ட் முறையில் பணம் பிடித்தம் செய்ய முடியும்.

மேலும், தவணைப் பிடித்தம் செய்வதற்கான கெடு தேதி முடிய 5 நாட்களுக்கு முன்னதாகவே, வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும். அவர்கள் ஒப்புதல்தரவில்லை என்றால் பணம் பிடித்தம் செய்யக் கூடாது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x