Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிய இரு இளைஞர்கள் கைது :

மதுரை திருநகர் காவல் சார்பு ஆய்வாளர் மருதலட்சுமி தலைமையில் போலீஸார் கடந்த 17-ம் தேதி ஹார்விபட்டி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நிலையூர் ரயில்வே கேட் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.அவர் தென்பரங்குன்றத்தைச் சேர்ந்த தினகரன் (22) என்பதும், அவர் அரிவாள் வைத்திருப்பதும் தெரிந்தது.

அண்ணாநகர் காவல் உதவி ஆய்வாளர் சுபா குருவிக்காரன் சாலை பகுதியில் 17-ம் தேதி ரோந்து சென்றார். அப்போது டாஸ்மாக் பார் அருகே அரிவாளுடன் நின்றிருந்த அண்ணாநகர் செக்க்ஷன் ஆபீஸ் பகுதியைச் சேர்ந்த பாலா பிரவீன்(28) என்பவரை பிடித்தனர்.

குற்றச்செயலில் ஈடுபடும் நோக்கில் திட்டமிட்டது தெரியவந்ததையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து அரிவாள்களைப் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x