Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM
நடிகர் விவேக் மறைவையொட்டி, ராமநாதபுரம் சேதுபதி நகர் பசுமை மாணவர் படை சார்பில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலரும், தலைமைக் காவலருமான சுபாஷ் சீனிவாசன் தலைமையில் ராமநாதபுரம் சேதுபதிநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சேதுபதி ஊருணியைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
கமுதியில் ‘வனத்துக்குள் கமுதி’ என்ற தன்னார்வ அமைப்பின் சார்பாக விவேக் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் பேருந்து நிலையத்தில் மரக்கன்று நடப்பட்டது. அதை பராமரிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் உறுதி ஏற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT