Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

கரோனாவால் 4 பேர் உயிரிழப்பு :

திருச்சி

மத்திய மண்டலத்தில் கரோனாவால் 4 பேர் நேற்று உயிரிழந்துள் ளனர்

மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி மாவட்டத்தில் 311 பேர், தஞ்சாவூரில் 175 பேர், திருவாரூரில் 119 பேர், நாகையில் 219 பேர், கரூரில் 80 பேர், புதுக்கோட்டையில் 57 பேர், பெரம்பலூரில் 5 பேர், அரியலூரில் 20 பேர் என 986 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி மாவட்டத்தில் 227, கரூரில் 80, திருவாரூரில் 92, தஞ்சாவூரில் 14, நாகையில் 121, புதுக்கோட்டையில் 24, பெரம்பலூரில் 12, அரியலூரில் 20 என மொத்தம் 590 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

4 பேர் உயிரிழப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நாகப்பட்டினத்தில் 2 பேர், திருச்சி, தஞ்சாவூரில் தலா ஒருவர் என 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x