Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

தெரு நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு :

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் தெரு நாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் நேற்று முன்தினம் உயிரிழந் தன.

விக்கிரமங்கலம் கருப்பனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(65). விவசாயியான இவர், தன்னுடைய ஆடுகளை மேய்த்துவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள தாழ்வாரத்தில் நேற்று முன்தினம் மாலை கட்டி வைத்துள்ளார்.

சிறிது நேரத்தில் ஆடுகள் கத்தும் சப்தம் கேட்டு ஆறுமுகம் சென்று பார்த்தபோது, தெரு நாய்கள் சில ஒன்று சேர்ந்து 5 ஆடு களை கடித்து குதறிக் கொண்டு இருந்தன. இதைக்கண்ட ஆறுமுகம் நாய்களை விரட்டி விட்டு ஆடுகளை பார்த்தபோது, 5 ஆடுகளும் இறந்து கிடந்தன. தொடர்ந்து, இறந்த ஆடுகள் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x