Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியக் கண்காட்சி :

ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப் படுவதையொட்டி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவியக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், திருநெல்வேலி, தூத்துக் குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய சின்னங்களை மாணவ, மாணவிகள் ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை தொடங்கி வைத்து அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி பேசும்போது, “தொன்மை நமது பெருமை. அதை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. இது போன்ற ஓவியங்கள் வரைவதன் மூலம் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பாரம்பரிய சொத்துகளின் முக்கியத்துவங்களை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்” என்றார்.

திருநெல்வேலி மைய நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் பேசினார். ஓய்வுபெற்ற நூலக ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், ஓவிய ஆசிரியர் முருகையா, கவிஞர் சுப்பையா, கலை ஆசிரியை சொர்ணம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஓவியக் கண்காட்சியில் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பாரம் பரிய சொத்துகளின் முக்கியத்து வங்களை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x