Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM
கோவில்பட்டியில் லாரி உரிமை யாளர்கள் சங்க நிர்வாகி கள் கூறியதாவது:
லாரிகளில் ஏற்றப்படும் தீப்பெட்டி பண்டல்களுக்கு லோடு ஏற்றுவது, இறக்குவதுக்கான கூலியை இதுவரை லாரி உரிமை யாளர்கள் தான் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.
ஒரு லாரியில் தீப்பெட்டி லோடு ஏற்ற ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் வரையும், இறக்குவதற்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரையும் கூலி வழங்குகிறோம்.
இந்நிலையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 12-ம் தேதி முதல் கூலியை 30 சதவீதம் உயர்த்திக்கொடுக்க வேண்டும் என கேட்கின்றனர். கரோனா வைரஸ் தாக்கத்தால் முன்புபோல லோடுகள் இல்லை.
மேலும், சுங்கச்சாவடி கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்குவது என்பது இயலாத காரியம். எனவே, ஜூன் 1-ம் தேதியில் இருந்து தீப்பெட்டி பண்டல்களை ஏற்றுவது, இறக்குவதற்கான கூலியை தீப்பெட்டி உற்பத்தியாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஏப்.21-ம் தேதி முதல் லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்றமாட்டோம் ” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT