Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது :

நாடு முழுவதும் கரோனா தொற்றை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதுவரை இந்தியாவில் 11 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 641 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணி வரையிலான நிலவரப்படி இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் 30 லட்சம் பேர் உயிரிழப்பு: இதுவரை உலக அளவில் கரோனாவுக்கு சுமார் 30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x