Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

பிளஸ் 2 தேர்வு ஹால்டிக்கெட் விரைவில் வெளியீடு :

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 5 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வை 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகளை தேர்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. செய்முறைத் தேர்வுகள் முடிந்த பின் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா பரவலால் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு எழுதுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செய்முறைத் தேர்வு 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் ஓரிரு நாட்களில் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இணையவழியில் வெளியிடப்படும். பள்ளிகளில் நேரில் சென்றும் ஹால்டிக்கெட் பெற்று கொள்ளலாம். தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியிடப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x