Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
மதுரை அழகர்கோவில் சுந்தர ராஜப் பெருமாள் கோயில் மற்றும் சோலைமலை முருகன் கோயில் பணியாளர்களுக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டது.
கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் பொது சுகாதாரத் துறை மூலம் கோவிட் தடுப்பூசி முகாம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அர்ஜுன்குமார் தலைமையில் நடைபெற்றது. சுந்தரராஜப் பெருமாள் கோயில் நிர்வாக அதிகாரி அனிதா முன்னிலை வகித்தார். இதில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் மற்றும் சோலைமலை முருகன் கோயில் பணியாளர்கள், அர்ச் சகர்கள் என 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் நூறுக்கும் மேற்பட்டோருக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT