Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
காரைக்குடி நகராட்சி சார்பில் கழனிவாசல் சந்தையில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் மருத்துவர் பிருந்தா தலைமையில் 30 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து நகராட்சி ஆணை யாளர் லட்சுமணன், நகர்நல அலு வலர் கார்த்திகேயன் ஆகியோர் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித் தனர். வணிக நிறுவனங்களின் பணியாற்றுவோர் முகக்கவசம் அணிய வேண்டும், கரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT