Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
மதுரை மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் வளம் சார்ந்த வங்கிக் கடன் ரூ.12,950 கோடி வழங்கப்படும் என நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து நபார்டு வங்கியின் மதுரை மாவட்ட துணை பொது மேலாளர் பி.எஸ்.ஹரிகிருஷ் ணராஜ் கூறியதாவது:
நபார்டு வங்கி வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக மதுரை மாவட்ட வங்கிகளுக்கு ரூ.172.72 கோடி மறுநிதியாக நபார்டு வங்கி வழங்கியுள்ளது. கிராமப்புற உட் கட்டமைப்பை வலுப்படுத்த 82 திட்டங்களை நிறைவேற்ற 2020-21-ம் ஆண்டுக்கு ரூ.65.45 கோடி கடனாக வழங்கியுள்ளது.
மதுரை வேளாண் கல்லூரியில் வேளாண் வணிக காப்பீடு மன்றத்தை அமைக்க ரூ.12.52 கோடி வழங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களுக்கு ரூ.20.92 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 6,100 மகளிர் சுய உதவிக் குழுக்களை கணினி மூலம் இணை த்துள்ளோம். 60 கிராமங்களில் நிதி மற்றும் துப்புரவு தொழில் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ள்ளது. மதுரை மத்திய கூட்டுறவு வங்கிக்கு மொபைல் ஏடிஎம் வேன் வாங்க ரூ.10 லட்சம் அளிக்கப் பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பெண்கள், விவசாயிகளின் தயாரிப் புகளை விற்பனை செய்வதற்காக சிறுமலை, கோரிப்பாளையத்தில் இயங்கும் 2 கிராமப்புற கடைகளுக்கு ரூ.9 லட்சம் மானியம் வழங் கப்பட்டுள்ளது.
வேளாண் சார்ந்த பல்வேறு தொழில்களின் வளர்ச்சிக்கு நபார்டு உதவி வருகிறது. 2021-22-ம் நிதியாண்டுக்கு மதுரை மாவட்டத்துக்கான வளம்சார் வங்கி கடன் ரூ.12,950 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள் ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT