Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
வில்லிபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் களைத் திருடி பலருக்கு தானமாகக் கொடுத்தவரைப் போலீஸார் கைது செய்தனர்.
வில்லிபுத்தூர், வத்தி ராயிருப்பு ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாகப் போலீஸாருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதையடுத்து, தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடினர். இந்நிலையில் வத்தி ராயிருப்பு நாடார் பஜாரைச் சேர்ந்த குருநாதன்(50) என்ப வரைப் போலீஸார் கைது செய் தனர்.
விசாரணையில், இவர் மோட்டார் சைக்கிள்களை தொடர்ந்து திருடியதும், அதை உறவினர்களுக்கும், தெரிந்தவர் களுக்கும் வழங்கியதும் தெரிய வந்தது. அதையடுத்து குரு நாதனிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருடிய 5 மோட்டார் சைக்கிள்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அவரை வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT