Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM

ராமநாதபுரத்தில் 24 மணி நேர உதவி மையம் :

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கரோனா தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற ஏதுவாக ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர உதவி மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் மருத்துவர்கள் குழு 8 மணி நேர சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இக்குழு அலுவலர்கள் கரோனா பரவல் தொடர்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் குறித்து கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தே கங்களுக்கு விளக்கம் பெற இந்த உதவி மையத்தை 77087 11334, 77082 92732, 77083 57835, 77089 25833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x