Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM
மிக மோசமான அளவில் காற்று மாசுபாடு நிலவும் 124 நகரங்களைக் கண்காணிக்க எட்டு பேர் அடங்கிய பணிக்குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்கியுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் அந்தப் பணிக்குழு செயல்படும். நகர மேம்பாடு, சாலைப் போக்குவரத்து, பெட்ரோலியம், வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட அமைச்சகத்தின் நபர்கள் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என அந்தப் பணிக்குழுவில் எட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். காற்று மாசுபாடு மிக மோசமாக இருக்கும் 124 நகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இப்பணிக்குழு கண்காணிக்கும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
5 வருடங்களாக காற்றின் தரம் மோசமாக இருக்கும் இடங்கள் என்பதன் அடிப்படையில் 124 நகரங்களின் பட்டியல் உருவாக்கப்பட் டுள்ளது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிராவில் 18 நகரங்கள், தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருச்சி, மதுரை ஆகிய 3 நகரங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT