Last Updated : 17 Apr, 2021 03:13 AM

 

Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: சுழல் மன்னன் முரளிதரன்

டெ ஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி, யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத சாதனையைப் படைத்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 17). இன்றைய தினம் அவரைப் பற்றிய சில முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:

1972-ம் ஆண்டில் கண்டியில் உள்ள தமிழ்க் குடும்பத்தில் முத்தையா முரளிதரன் பிறந்தார். அவரது அப்பா சின்னசாமி முத்தையா, கண்டியில் பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தார். கண்டியில் உள்ள செயின்ட் ஆன்டனீஸ் கல்லூரியில்தான் முரளிதரன் படித்தார். முன்னதாக பள்ளியில் படிக்கும் காலத்தில் அவர் ஒரு மிதவேக பந்துவீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும்தான் இருந்துள்ளார். பின்னர் அவரது இளம் வயது பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோ என்பவர்தான் அவரை சுழற்பந்து வீச்சில் பயிற்சி எடுக்குமாறு கூறி மடைமாற்றி விட்டுள்ளார். பள்ளியில் படித்த காலத்தில் ரக்பி விளையாட்டு வீரராகவும் முரளிதரன் இருந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முரளிதரனின் தொடக்கம் அத்தனை இனிமையானதாக இல்லை. 1991-ம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்ற இலங்கை-ஏ அணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரில் அவரால் ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியவில்லை. அதன்பிறகு கடுமையாக போராடி, 1992-ம் ஆண்டு தனது 20-வது வயதில் டெஸ்ட் போட்டிகளில் காலடி எடுத்து வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் அவர் கிரேக் மெக்டர்மாட்டின் விக்கெட்டைத்தான் முதலாவதாக வீழ்த்தினார். அதன்பிறகு அவரது காட்டில் விக்கெட் மழை பொழியத் தொடங்கியது.

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை அவர் வீழ்த்தியதைப் பற்றித்தான் பலரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் 534 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1,000 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் முத்தையா முரளிதரன் படைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x