Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM

வேலூர் அஞ்சலகத்தின் பொன் விழா சிறப்பு தபால் உறை வெளியீடு :

வேலூர் தலைமை அஞ்சலகத்தின் பொன் விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் முத்திரையுடன் கூடிய தபால் உறை வெளியிடப்பட்டது.

வேலூர் தலைமை அஞ்சலகத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் முத்திரையுடன் கூடிய தபால் உறை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் கட்டிடம் கடந்த 1971-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி திறக்கப்பட்டது. இதன் பொன் விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு முத்திரையுடன் கூடிய அஞ்சல் உறையை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோமல் குமார் நேற்று வெளியிட்டார். இதன் முதல் பிரதியை வேலூர் தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

இதில், வேலூர் அஞ்சல் கிழக்கு உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திருஞான சம்பந்தன், தபால் தலை சேகரிப்பாளர்கள் தமிழ்வாணன், எபினேசர் சுந்தர்ராஜ், அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x