Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM

பேக்கரியை சூறையாடிய ரவுடி கும்பல் : ஊழியர்கள் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் செஞ்சி பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு அதே கிராமத்தில் வசிக்கும் இருவர், பேக்கரிக்கு வந்து பொருட்களை வாங்கினர். அதற்கு பணம் கொடுக்க மறுத்து, ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர், தனது ஆதரவாளர் களான 10-க்கும் மேற்பட்டோரை கடைக்கு அழைத்தனர். அங்கு வந்த அவர்கள், பேக்கரியில் இருந்த பொருட்களை தூக்கி வீசியும், கண்ணாடிகளை அடித்துநொறுக்கியதோடு ஊழியர்களையும் தாக்கினர்.

இதுகுறித்து பேக்கரி மேலாளர் சாத்தையா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும். பேக்கரியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, கும்பலில் இருந்தவர்களை அடை யாளம் கண்டு, அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x