Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த 10-ம் தேதி 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
கூச் பெஹர் மாவட்டம் சிதால்குச்சியில் உள்ள ஒரு வாக்குப்பதிவுமையத்துக்கு வெளியே ஒருவர்மயங்கி விழுந்துள்ளார். ஆனால் பாதுகாப்புப் படையினர் தாக்கியதே இதற்குக் காரணம் எனவதந்தி பரவியதால், உள்ளூர் மக்கள் பாதுகாப்புப் படையினரிடமிருந்து ஆயுதங்களை பறிக்க முயன்றனர். இதையடுத்து, கலவரம் வெடித்ததால், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று சிதால்குச்சி சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்துஆறுதல் கூறினார்.
இது தொடர்பான புகைப்படம் திரிணமூல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கைக்குழந்தையை மம்தா கையில் ஏந்தி உள்ளார். மேலும் “வங்க மகளைவிட வேறு யாராலும் உங்கள் வலியை புரிந்துகொள்ள முடியாது. சிதால்குச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மம்தா நேரில் சந்தித்தார்” என பதிவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT