Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

வேளச்சேரி 92-வது வாக்குச்சாவடியில் 17-ல் மறுவாக்குப்பதிவு :

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் வரும் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. அன்று மாலை சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள 92-வது எண் வாக்குச்சாவடியில் இருந்து 2 மின்னணு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகியவற்றை விதியை மீறி இருசக்கர வாகனத்தில் தேர்தல் பணியாளர்கள் எடுத்துச் சென்றதால் சர்ச்சை உருவானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிக்கை அனுப்பி வைத்தார். குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், வேளச்சேரி தொகு திக்குட்பட்ட 92-வது எண் வாக்குச் சாவடியில் வரும் 17-ம் தேதி காலை 7 முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தவும் இதுகுறித்து அந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பரம் செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x