Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிய பஞ்சலிங்க அருவி :

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கும்போது அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், கோயில் மற்றும் அருவிக்குச் செல்ல பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

பல்வேறு தளர்வுகளுக்குப் பின் தடை நீக்கப்பட்டதால், பஞ்சலிங்க அருவிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. எனினும் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் மகாசிவராத்திரி விழா, நடப்பு ஆண்டில் சிறப்பு ஏற்பாடுகள் தவிர்க்கப்பட்டு, குறைந்த அளவிலான பக்தர்கள் வருகையோடு நிகழ்ந்தது. தற்போது மீண்டும் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பஞ்சலிங்க அருவிக்கும், கோயிலுக்கும் வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.இதுகுறித்து அமணலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘மக்கள் மத்தியில் கரோனா பீதி மீண்டும் ஏற்பட்டுள்ளதால், கோயிலுக்கும், அருவிக்கும் வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் மட்டும் வந்து செல்கின்றனர். பயணிகள் வராததால், பஞ்சலிங்க அருவி வெறிச்சோடிக் காணப்படுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x