Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

திருப்பூர் மாநகர், பொங்கலூர் பகுதிகளில் - கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் :

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொங்கலூர் வட்டார சுகாதாரத் துறை மூலமாக நோய்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முகக் கவசம் இல்லாமல் பொது வெளியில் வருபவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரைபொங்கலூர் வட்டார சுகாதாரத் துறையினர் மூலமாக, 473 பேருக்கு ரூ.1 லட்சத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலரும், மருத்துவருமான சுந்தரவேல் கூறினார்.

முதன்மைச் செயலர் அதிருப்தி

இதேபோல, திருப்பூர் மாநகரில்கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம்விதித்தனர். திருப்பூர் மாநகரிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலரும், முதன்மை செயலருமான கே.கோபால் ஆய்வு செய்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளும் பணியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. வணிக வளாகங்கள், உணவகங்கள், பேக்கரிகள் என பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியின் முதலாம்மண்டலமான 15 வேலம்பாளையத்தில் ரூ.9,600, 2-வதுமண்டலமான தொட்டிபாளையத்தில் ரூ.13,400, 3-வது மண்டலமான நல்லூரில் ரூ.8,300, 4-வது மண்டலமான ஆண்டிபாளையத்தில் ரூ.9,500 என ரூ.40,800 அபராதம் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x