Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

கீழடி அகழாய்வில் மண் பிரிமனை கண்டெடுப்பு :

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பிப்.13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கீழடியில் 9 குழிகளுக்கு அளவீடு செய்யப்பட்டு, படிப்படியாக குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில் பாசி மணிகள், பானை ஓடுகள், பனைகள், தட்டுகள், மண்ணால் ஆன கூம்பு வடிவப் பாத்திரம், மண் மூடிகள், கருப்பு, சிவப்பு நிற மண் கின்னம் கிடைத்தன. தற்போது ஒரு குழியில் அருகருகே தண்ணீர் பானை வைக்கும் மண் பிரிமனையும், கருப்பு நிறத் தட்டும் கிடைத்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x