Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

திண்டுக்கல்லில் முகக்கவசம் வழங்கி மக்களிடம் போலீஸார் விழிப்புணர்வு :

திண்டுக்கல் நகரில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற பலமுறை அறிவுறுத்தியும் பொதுமக்கள், கரோனா பாதிப்பின் தாக்கத்தை உணராமல் முகக்கவசம் இன்றி செல்வது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது என அலட்சியமாக இருந்து வருகின்றனர்.இதையடுத்து நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீஸார் இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி, இலவசமாக முகக்கவசம் வழங்கினர். மேலும் கரோனா பாதிப்பு குறித்து அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x