Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM

கோவில்பட்டியில் தேரோட்டம் ரத்து :

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முதல் 5 நாட்கள் கோயில் வெளிப்பிரகாரங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. அதன் பின்னர், கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டதால், மண்டகப்படிதாரர்கள் 10 பேர் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு, உட்பிரகாரத் திலேயே வீதி உலா நடத்தப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோ ட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது. சுவாமி, அம்பாள் தோளி கிண்ணம் சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதனிடையே, இக்கோயில் பணியாளர்கள் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x