Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM
ம.பி.யில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 5,939 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், வைரஸ் எதிர்ப்பு ‘ரெம்டெசிவர்’ மருந்துக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்த மருந்தை அரசு கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த மருந்து விநியோகம் சீரடையும்.
கரோனா நோயாளிகளுக்கு சீரான ஆக்ஸிஜன் வினியோகத்தை உறுதிசெய்ய 2 ஆயிரம்ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர்களுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு இடம் வழங்க உள்ளது. இது தொடர்பாக சில தனியார் மருத்துவமனைகள் அரசிடம் பேசி வருகின்றன.
கரோனா பாதுகாப்பு விதிகளை மக்கள் முறையாக பின்பற்றினால் நோய்த் தொற்றை நாம் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT