Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM

அண்ணா பல்கலை.யின் நிர்வாகத்தை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு :

அண்ணா பல்கலை. நிர்வாகப் பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எல்.கருணாமூர்த்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்ணா பல்கலை. துணைவேந்தர் எம்.கே.சுரப்பாவின் பதவிக் காலம் ஏப்.11-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சிறப்பு சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை செய்ய உயர்கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் உறுப்பினர்களாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறைகூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, அண்ணா பல்கலை. கிண்டி பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப பொறியியல் துறை தலைவர் ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர் செயல்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x