Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

ரூ.4.80 கோடி மதிப்பிழந்த நோட்டு பறிமுதல் :

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.4.80 கோடியை காளையார்கோவில் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக செங்கல்பட்டுவைச் சேர்ந்த பெண் உட்பட 2 பேரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை செங்கல்பட்டுவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி வரலெட்சுமி(45). அங்கு தனியார்தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.4.80 கோடி இருந்தது.

இதை மாற்றித் தருவதாக காளையார்கோவில் அருகே வலையம்பட்டியைச் சேர்ந்த அருள் சின்னப்பன்(47) தெரிவித்துள்ளார். அதை நம்பி மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகளான ரூ.4.80 கோடியுடன் காளையார்கோவில் அருகே உள்ள வலையம்பட்டிக்கு நேற்று வந்துள்ளார்.

இந்த ரகசிய தகவல் கிடைத்ததும் காளையார்கோவில் போலீஸார் வலையம்பட்டிக்குச் சென்று ரூ.4.80 கோடியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வரலெட்சுமி, அருள்சின்னப்பன் ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x